சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டர் ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிவிக்கப்படுவதாக தகவல் பரவியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்கு ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் ரகசிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி கர்ப்பிணி ஒருவர் அந்த ஸ்கேன் சென்டருக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கம் போல் அவருக்கு ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும், மருத்துவ பரிசோதகருமான சிவசங்கரன் பரிசோதனை செய்துள்ளார்.
100க்கும் அதிகமான பெண் சிசுக் கொலை